பிரார்த்தனை செய்த சுட்டி குழந்தை: வியந்து பாராட்டிய பெற்றோர்…!!
அமெரிக்காவின் கரோலினாவில் சுட்டி குழந்தை ஒன்று தனியாக பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை வியப்படைய செய்துள்ளது.
அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் குடியிரிந்து வருபவர்கள் Kathryn மற்றும் Caleb Whitt குடும்பத்தினர். இவர்களது 2 வயது குழந்தை Sutton வீட்டில் இருப்பதால், பக்கத்து விளையாட்டு அரங்கில் சென்றிருந்த அவர்கள் அங்கிருந்து அவசரமாக வீடு வந்து சேர்ந்துள்ளனர்.
பொதுவாக குழந்தை Sutton உடன் இரவு பிரார்த்தனை முடித்த பின்னரே Kathryn குடும்பத்தினர் தூங்க செல்வது வழக்கம். கரோலினா பகுதி மக்கள் விளையாட்டு பிரியர்களானதால் அன்றைய தினம் Kathryn மற்றும் Caleb Whitt குடும்பத்தினர் விளையாட்டு அரங்கில் சென்றுள்ளனர்.
இதனால் குழந்தையுடன் அவர்களுக்கு பிரார்த்தனை செய்ய முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் அவசரமாக வீடு வந்து சேர்ந்த அவர்களுக்கு, மாடியில் இருந்து பேசும் சத்தம் கேட்டுள்ளது, உடனடியாக Kathryn தனது கைப்பேசியில் குழந்தையை கண்காணிக்கும் செயலியை திறந்து பார்த்தபோது,வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
காரணம், குழந்தை Sutton அவர்கள் தினமும் சொல்லும் பிரார்த்தனையை அப்படியே உருவிட்டுக்கொண்டிருந்தது. பிரார்த்தனையின் முடிவில் அனைவருக்கும் நன்றி சொல்லும் பகுதியில், தமது பாட்டி, பெற்றோர் மற்றும் சாண்டா கிளாஸ் பெயரையும் கூறியது அவர்களை பெரும் மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.
இரண்டு நிமிடங்கள் நீண்ட அந்த பிரார்த்தனையில் கடைசி பகுதி மட்டுமே தம்மால் பதிவு செய்ய முடிந்ததாக கூறும் அவர், உடனடியாக தமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வீடியோ பதிவை பேஸ்புக் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த அனைவரும் சுட்டி குழந்தையின் பிரார்த்தனை தங்களை நெகிழச்செய்துள்ளதாக குறிப்பிட்டு தகவல் அனுப்பியுள்ளனர்.
Average Rating