விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை…!!

Read Time:1 Minute, 55 Second

1cf9c11c-a518-409c-9064-ccee26a9d2f5_S_secvpfஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் தூக்கிட்டு தற்கொலை, தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மருத்துவ கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம் என 2016-ம் ஆண்டு இளையதலைமுறையினருக்கு சோகமான ஆண்டாக தொடங்கியுள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் நான்காவது மாடியில் இருந்து குதித்து 20 வயது பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூர் மாவட்டம், செப்ரோலு மண்டலம், வட்லமுடி கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துவந்த மாணவி ஹரினி(20) அதே கல்லூரி வளாகத்தையொட்டியுள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இன்று காலை விடுதியின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த அவர் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்ட சகமாணவிகள் ஹரினியை அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்துக்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹரினியின் பிரேதத்தை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து அவரது மரணத்துக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர் கல்வி கவுன்சில் துணைத்தலைவர் மீது தாக்குதல்: மாணவர் அமைப்பு நிர்வாகி கைது…!!
Next post பொன்சேகா – ரணில் உடன்படிக்கை அடுத்த வாரம்…!!