திருமண வைபவம் நடைபெற்ற மண்டபத்துக்குள் நிர்வாண கோலத்தில் புகுந்த நபர்…!!
திருமண வைபவமொன்றுக்குள் நிர்வாணமாகப் புகுந்த நபர் ஒருவரை அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை செய்யும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது இந் நபர் நிர்வாண கோலத்தில் புகுந்தார்.
திருமண வைபவத்தில் பங்குபற்றிய பலரும் இந் நபரைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, பொலிஸார் அங்கு வந்து மேற்படி நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் பிலிப் மெக்கொலக் எனத் தெரியவந்தது. அவர் மது போதையில் காணப்பட்டார்.
அவரை மறுநாள் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியபோது அந் நபர் பொலிஸாரிடம் தானும் தனது நண்பர்களும் மது அருந்தியது முதல், திருமண வைபவமொன்று நடைபெற்ற இடத்துக்கு நிர்வாணமாகப் புகுந்தது வரையான விடயங்களை “அக்ஷனுடன்” விபரித்த காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்றதாகும். ஆனால், கடந்த 26 ஆம் திகதி அவுஸ்திரேலிய தினம் கொண்டாடப்பட்ட வேளையில் இவ் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.
Average Rating