வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு துபாயில் தற்கொலை செய்த பெரம்பலூர் வாலிபர்..!!

Read Time:3 Minute, 39 Second

dfgfg-3பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஓகளூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 30).

இவர் துபாய் நாட்டில் டெரா துபாய் என்ற இடத்தில் ஒரு எலக்ட்ரானிக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கடையில் இருந்து மற்றொரு கடைக்கு தொலைக்காட்சி பெட்டி ஒன்றை டெலிவரி செய்ய முயன்ற போது டி.வி. உடைந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர்கள் ராஜ்குமாரை திட்டியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தற்கொலை செய்வது குறித்து ராஜ்குமார் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் பரபரப்பாக பேசியிருப்பதாவது:–

எனக்கு நீதி கிடைக்க வேண்டும், கம்பெனியில் முதலாளிகள் தகாத வார்த்தைகளால் மிகவும் மோசமாக என்னை திட்டி செத்து போ, என்று கூறியதால் இந்த முடிவுக்கு வந்தேன்.

இந்த மெசேஜ் பார்த்து அரை மணி நேரத்தில் என் உயிர் என்னிடம் இருக்காது. நீங்கள் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். அப்பா, அக்காவை எந்தவித கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், தற்போது இறந்து போன என் அம்மாவிடம் நான் செல்கிறேன்.

என் உயிருக்கு நீதி கிடைக்க வேண்டும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், பா.ம.க உதவ வேண்டும், எனது உடலை ஓகளூரில் அடக்கம் செய்ய வேண்டும். எனக்கு இது இறுதி சடங்கு அல்ல, நான் நல்ல முடிவை தான் எடுத்து இருக்கிறேன். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. எனது அம்மா பக்கத்திலே அடக்கம் செய்ய வேண்டும். அதனை உறவினர்கள், நண்பர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்,

என்னை என்னென்ன வார்த்தைகளால் திட்ட வேண்டுமோ, அப்படியெல்லாம் திட்டி விட்டார்கள். இதை கேட்டு விட்டு உயிர் வாழ விரும்பவில்லை. என்னால் அவர்களை அழிக்க முடியும். அவர்கள் குடும்பம் வாழ வேண்டும், அதற்காக என்னை நான் அழித்துக்கொள்கிறேன். இதற்கு நீதிகிடைக்க வேண்டும். அடக்கம் நடக்க ஏற்பாடு செய்யுங்கள், முருகா, முருகா,முருகா என பேசியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் இப்படி தகவல் அனுப்பி ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ளனர். மேலும் இறப்புக்கு காரணம் ஆனவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி மலைபாதையில் கார் திடீரென எரிந்தது: தமிழக பக்தர்கள் 5 பேர் தப்பினர்…!!
Next post கும்மிடிப்பூண்டியில் பூட்டிய வீட்டில் இரும்பு கம்பியால் கழுத்தை இறுக்கி பிளஸ்-2 மாணவி கொலை..!!