இன்டர்நெட் மூலம் அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரில் பார்க்கிறார்கள்: இந்தியாவில் பரவும் புது மோகம்

Read Time:2 Minute, 48 Second

ani_computer_1.gifபல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தரும் சாதனமாக இன்டர்நெட் திகழ்கிறது. ஆனால் மல்டி மீடியா துறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக இப்போது இன்டர் நெட்டில் வெப் கேமரா மூலம் நேரடியாகவே அடுத்த வருடன் பேச முடிகிறது. ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து பேசுவது போல பேசிக் கொள்ளலாம். இது இப்போது தவறான முறையில் கையாளப்படுகிறது. அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரிலேயே வெப்கேமரா மூலம் பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த அநாகரீக பழக்கம் பரவி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் இந்த மோகம் வேகமாக பரவி வருகிறது. காசு கொடுத்தால் நேரிலேயே செக்ஸ் காட்சிகளை அறங்கேற்ற வெளிநாடுகளில் ஏராளமான ஜோடிகள் உள்ளனர். இன்டர்நெட் மூலம் உரிய பணத்தை செலுத்தினால் அடுத்த நிமிடம் அவர்கள் விருந்து படைக்க தயாராகி விடுகிறார்கள். இது போன்ற காட்சிகளை கணவன்- மனைவியாக இருக்கும் ஜோடிகள் கூட ஆர்வமாக பார்க்கிறார்களாம். பல தம்பதிகள் இடையே புளூ பிலிம் பார்க்கும் பழக்கம் உண்டு. அது எப்போதோ படம் பிடிக்கப்பட்ட காட்சி என்பதால் அதை பார்ப்பதில் ஆர்வம் இருப்பது இல்லை. ஆனால் இன்டர்நெட் மூலம் வெப் கேமிரா உதவியுடன் செக்ஸ் காட்சிகளை நேரடியாக பார்ப்பதால் இதன் மீது ஆர்வம் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிலர் எதிர் முனையில் ஆணையோ அல்லது பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து ரசிப்பார்களாம். இந்த கலாச்சாரம் புதிய சீரழிவை நோக்கி செல்கிறது. தற்போதைய அறிவியல் உலகில் இதை தடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறி தான். இணையதளம் வைத்திருக்கும் பெற்றோர்கள் மிகவும் விழிப்புடன் இருந்தால் தான் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது
Next post சேலம் அருகே கட்டாய திருமணத்திற்கு கடத்தப்பட்ட மாணவி மீட்பு: வாலிபர் உள்பட 3 பேர் கைது