66 வயதான பெண் கொலை 70 வயதான கணவர் கைது…!!
Read Time:1 Minute, 15 Second
வாரியபொல சிவல்லவ ஈதனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலையுண்ட சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண் கடந்த 2ஆம் திகதி தனது வீட்டில் வைத்து கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் தான் வீட்டினுள் உறக்கத்தில் இருந்ததாக இப் பெண்ணின் கணவர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்த போதிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த வாரியபொல பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவரா 70 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாரியபொல நீதிவான் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில் வாரியபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating