உயிர் போகும் நேரத்திலும் பிள்ளையை காப்பாற்றிய பெற்றோர்: கண்கலங்க வைக்கும் சோக சம்பவம்…!!

Read Time:2 Minute, 47 Second

43545இந்தியாவின் மதுரையில் 18 பேர் பலியான கோர விபத்தில், உயிர் போகும் நேரத்திலும் மகனை நெஞ்சில் அனைத்துப் பெற்றோர் காப்பாற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவது,

மதுரையில் சீமெந்து மூடைகளை ஏற்றி சென்றலொறியொன்றும், நெல்லையில் இருந்து கம்பத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில், ஒரு சிறுவன், ஒரு சிறுமி, 12 ஆண்கள், 4 பெண்கள் உட்பட மொத்தம் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் நெஞ்சை உருக்குவது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மீட்புப் பணியின் போது, விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் உடல்கள் கைகளை அணைத்து கட்டிப்பிடித்தபடி மீட்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் அவர்களின் உடல்களைப் பிரித்தபோது, அந்த தம்பதியினருக்கு இடையே அவர்களது நான்கு வயது மகன் உயிருக்கு போராடிய நிலையில் சிக்கியிருந்ததைக் கண்டு மீட்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளர். உடனடியாக அச்சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீட்புக் குழுவினர் அனுமதித்துள்ளனர்.

விபத்து நடந்தபோது, மகனின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து, தங்கள் உடம்பையே பந்து போல் சுருட்டி, தங்கள் நெஞ்சுக்கூட்டில் அணைத்துப் பிடித்துள்ளனர்.

இதனால் அச்சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான். மகன் மீது அப்பெற்றோர் வைத்திருந்த பாசத்தையும், விபத்து நடந்த நேரத்தில் உடனடியாக சாமர்த்தியமாகச் செயல்பட்ட விதத்தையும் கண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தோர் கண்ணீர் வடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய 68 வயதான நபர் கைது…!!
Next post வெலிகமையில் ஒன்றரை வயது குழந்தை குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு…!!