மன்னார் விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்…!!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பிரதான வீதியில், வெள்ளிக்கிழமை (19) மாலை இடம் பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் கிராமத்தைச் சேர்ந்த மூவர் மது அருந்திய நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளிள் மீண்டும் தமது வீடு நோக்கி சென்ற போது இலுப்பைக்கடவை பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக நின்ற பனை மரத்துடன் மோதியது.
இதன் போது ஜேம்ஸ் மெக்கி (வயது – 23) என்ற இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏனைய இருவரும் படு காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு வரப்பட்ட போது சதாசிவம் கஜேந்திரன் (வயது – 30) என்பவர் மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
மேலும், படு காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆர்.ரவிக்குமார்(வயது-30) குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த மூவரும் இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,குறித்த மூவரும் விபத்து ஏற்படும் போது மது போதையில் காணப்பட்டதாகத் தெரிய வருகின்றது. மேலதிக விசாரனணகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating