விபரீதத்தில் முடிந்த உற்சாக துப்பாக்கிச் சூடு: தலையில் குண்டு பாய்ந்து மணமகன் பரிதாப பலி…!!
வசதி படைத்த செல்வந்தர்களின் திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றில் சிலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வேடிக்கைக்காக நடத்தப்படும் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு வழிப்போக்கர்களான அப்பாவி மக்கள் சிலர் காயமடைவதும், உயிரிழப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் உள்ள பிரேம் நகர் பகுதியில் மாப்பிள்ளை ஊர்வலத்தின்போது உற்சாக மிகுதியால் சில கிறுக்கர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு மணமகனின் உயிரையே குடித்து, திருமணமாக இருந்த ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டது.
கடந்த புதன்கிழமை இரவு மணமகள் வீட்டை ஊர்வலம் நெருங்கியபோது மணமகனின் உறவினர்கள் சிலர் உற்சாக மிகுதியில் தங்களது துப்பாக்கிகளை எடுத்து வானத்தை நோக்கி சுட்டனர். அதில் ஒரு குண்டு மணமகன் அமித் ரஸ்டோகி(28) தலையில் பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து துடிதுடித்த அமித்-ஐ உறவினர்கள் லக்னோ அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு விரைந்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதனால், சவவீடாக மாறிப்போன திருமண வீட்டில் காத்திருந்த உறவினர்கள் அனைவரும் சோகக் கடலில் ஆழ்ந்துள்ளனர்.
Average Rating