நீதிமன்றத்தில் இருந்து 5 கைதிகள் தப்பி ஓட்டம் – ஒருவர் சிக்கினார்…!!
Read Time:1 Minute, 3 Second
வீடுகளில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கேகாலை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் நொச்சியாகம பகுதியையும் மற்றைய மூவரும் கேகாலை பகுதியையும் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
Average Rating