சீனாவில் ஒளிபரப்பான ஓரின சேர்க்கை டி.வி. தொடர் நிறுத்தம்…!!

Read Time:1 Minute, 25 Second

7c7d69bf-7ba4-461c-9d63-4e8b63fedb47_S_secvpfசீனாவில் முந்தைய காலங்களில் ஓரின சேர்க்கை குற்றச்செயலாக கருதப்பட்டது. 1997–ம் ஆண்டு ஓரின சேர்க்கை குற்றச் செயல் அல்ல என்று அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஓரின சேர்க்கை தொடர்பான சினிமா படங்கள் எல்லாம் வெளிவந்து உள்ளன.

இந்த நிலையில் அந்த நாட்டின் இணைய தள டி.வி. ஒன்று ஓரின சேர்க்கை தொடர்பான தொடரை வெளியிட்டு வந்தது. 2 ‘டீன் ஏஜ்’ வாலிபர்கள் ஓரின சேர்க்கை பழக்கத்தில் ஈடுபடுவது போன்ற கதை பின்னப்பட்டு இந்த தொடர் வெளிவந்து கொண்டு இருந்தது. ஆனால், இதற்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும், மறுபக்கம் கடும் எதிர்ப்பும் இருந்து வந்தது.

இதுவரை 15 தொடர்கள் வெளிவந்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான காரணத்தை அந்த டி.வி. நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இந்த தொடருக்கு உரிய அனுமதி பெற்றுத்தான் ஒளிபரப்பியதாக இந்த நிறுவனம் கூறி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கான கிடில் எனும் புதிய தேடல் பகுதியை உருவாக்கியுள்ளது கூகுள்…!!
Next post வேப்பம்பட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது – வாலிபர் தீயில் கருகினார்…!!