கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பாலியல் பலாத்கார குற்றசாட்டில் இருந்து விடுவிப்பு…!!
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பிரித்வி ஸ்ரீதர் பாலியல் பலாத்கார குற்றசாட்டில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் பிரித்வி ஸ்ரீதர் (21). இவர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் குவின்ஸ் கல்லூரியில் படித்தார். இவர் தன்னுடன் படித்த மாணவியை கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 4–ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி போலீசில் புகார் செய்தார். அதை தொடர்ந்து பிரித்வி ஸ்ரீதர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. இத்தீர்ப்பில் இந்திய மாணவர் பிரித்வி ஸ்ரீதர் பாலியல் பலாத்கார குற்றசாட்டு நிருபிக்கப்படாததால் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்வி ஸ்ரீதர் குடும்பத்தினர் “ அவரது வாழ்க்கை நாசமாகிவிட்டது கருதினோம். ஆனால் இந்த தீர்ப்பு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த கடினமாக சூழ்நிலையின் போது எங்களுக்கு ஆதரவாக இருந்த குவின்ஸ் கல்லூரி, உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
Average Rating