அதிபர் போட்டிப் பரீட்சையில் அதிகளவானோர் சித்தியடையவில்லை…!!

Read Time:1 Minute, 29 Second

examஅதிபர்களைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சையில் அதிகளவானோர் சித்தியடையவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்,

அண்மையில் தரம் 3 அதிபர் பதவி வெற்றிடத்திற்காக போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.இந்தப் போட்டிப் பரீட்சையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையானவர்கள் கூட சித்தியடையவில்லை.

அதிபர் சேவையில் இணைந்து கொள்வதற்காக 19,000 பரீட்சார்த்திகள் போட்டிப் பரீட்சையில் தோற்றிய போதிலும், 4,070 பேர் மட்டுமே சித்தியடைந்துள்ளனர்.

இதன்படி, வெற்றிடமாக காணப்படும் 5,600 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதியளவானவர்கள் சித்தியடையவில்லை.இதனால் 1,524 அதிபர் வெற்றிடங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

இதேவேளை, மார்ச் மாத இறுதிக்குள் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்களும் இரண்டு வார கால பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை…!!
Next post குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் பெண் கைது…!!