சீர்காழி அருகே போதையில் மயங்கி கிடந்த மாணவர்கள்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்…!!
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் 2 மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வந்தனர்.
ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அங்குள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தனர். இதில் போதை அதிகமானது. பள்ளி சீருடையில் சாலையில் மயங்கி கிடந்தனர்.
இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள கடையில் அமர வைத்தனர்.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விசாரணையில் 2 மாணவர்களும் புங்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றனர்.
மாணவர்கள் மது போதையில் சாலையில் கிடந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அதனை பலருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating