இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் பொதுமக்கள் பீதி…!!
Read Time:58 Second
இந்தோனேசியாவில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பதாங்கில் இருந்து 808 கி.மீ. தெற்மேற்கில் இது மையம் கொண்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Average Rating