முதல் குழந்தை லீப் வருடத்தில் பிறந்த நிலையில் 2–வது குழந்தையையும் லீப் வருடத்தில் பெற்ற பெண்…!!

Read Time:1 Minute, 43 Second

82c9d84c-749f-46c3-a655-4f51cc33350d_S_secvpfஅமெரிக்காவில் உள்ள மிஜிகானை சேர்ந்த தம்பதி ஜாட் – மிலிசா. இவர்களுக்கு ஏற்கனவே எலியானா அடயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த 2012–ம் ஆண்டு லீப் வருட நாளான பிப்ரவரி 29–ந் தேதி பிறந்தது.

இந்த நிலையில் மிலிசா மீண்டும் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த 28–ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 29–ந் தேதி அதிகாலை 3.06 மணிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையும் லீப் வருட தினத்தில் பிறந்துள்ளது.

இத்தனைக்கும் 10 நாட்களுக்கு முன்பே மிலிசாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் நாள் குறித்து இருந்தனர். ஆனால், தாமதமாக பிரசவ வலி ஏற்பட்டு லீப் நாளில் குழந்தை பிறந்துள்ளது.

தங்களது 2 குழந்தைகளையுமே லீப் நாளில் பெற்றிருப்பதால் இந்த தம்பதிகள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். இரு தொடர்பாக மிலிசா கூறும் போது, அடுத்தடுத்து 2 குழந்தைகளையுமே லீப் நாளில் பெற்றெடுத்திருப்பதால் எனக்கு லாட்டரியில் பெரிய தொகை பரிசாக விழுந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாட்டிக் கொண்ட இரா.துரைரத்தினமும், சாட்டை சுற்றியவர்களும்! -புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)
Next post இங்கிலாந்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை…!!