வௌ்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
Read Time:52 Second
வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 6.15 மணியளவில் மாத்தறையிலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி செல்லும் ரயிலில் மோதுண்டு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதாக இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வௌ்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating