அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்கள் உடல் 22-ந் தேதி ஐதராபாத் வருகிறது

Read Time:1 Minute, 35 Second

ani_usa_1.gifஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சந்திரசேகர ரெட்டி கொம்மா, கிரண்குமார் ஆலம் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் லூசியானா பல் கலைகழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது அறையில் 3 மர்ம மனிதர்கள் புகுந்து அவர்களை சுட்டுக் கொன்று விட்டு காரில் தப்பி ஓடி விட்டனர். அக்கம்-பக்கத்தவர்கள் கொடுத்த அடையாளர்களை வைத்து அந்த கொலையாளிகளின் படத்தை போலீசார் வரைந்து வெளியிட்டுள்ளனர். அவர்களை பிடிக்க அமெ ரிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட சந்திரசேகர ரெட்டி, கிரண்குமார் ஆகி யோரின் உடல் நாளை அமெரிக்காவில் இருந்து இந்தியா அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த உடல்கள் 22-ந் தேதி (சனிக்கிழமை) ஐதராபாத் வந்து சேரும். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த உடல் களை அனுப்பிவைக்கும் ஏற்பாடு களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் அலுவலக அதிகாரிகள் செய்து வருகிறார் கள். ஏற்கனவே அவர்களது உறவினர்களும் அமெரிக்கா சென்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருமணமான 3மாதத்தில் 3-வது கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பமீலா
Next post பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்தது; 50 பேர் பலி