போலீஸ் கண் எதிரே காதல் ஜோடியை காரில் கடத்தி சென்ற கும்பல்..!!

Read Time:3 Minute, 13 Second

timthumb (1)ஓமலூர் சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் பெருமாள் மகன் பூபாலன்(24). பி.ஏ, பட்டதாரியான இவர் கடந்த ஒரு வருடங்களாக சென்னையில் உள்ள தனியார் கால் டாக்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

இதே போன்று சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருடைய மகள் கோடீஸ்வரி (24). இவர் டிப்ளமோ படித்து விட்டு அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ததால் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டனர். இது காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூபாலன் ஓமலூருக்கு வந்து விட்டார்.

நேற்று முன்தினம் கோடீஸ்வரி தனது காதலனை தேடிக்கொண்டு ஓமலூர் வந்தார். ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு காதலன் வீட்டில் இருந்தனர். இது குறித்து சென்னையில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தெரியவந்தது.. அவர்கள் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.

பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்ல ஓமலூர் வந்தனர். காதலன் வீட்டில் வந்து பெண்ணை அழைத்தனர். அவர் வர மறுத்ததால் வலுக்கட்டாயமாக இழுத்ததால் அங்கிருந்து தப்பி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் விசாரித்த போலீசார் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் இருப்பதால் அங்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதற்கு காதலி கோடீஸ்வரி சம்மதிக்காமல் அங்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்றும், அதனால் அங்கு செல்ல மாட்டேன் என்றும் விடாப்பிடியாக இருந்தார். இதற்குள் காதலனின் உறவினர்களுக்கு தகவல் தெரிந்து காவல் நிலையம் முன்பு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் காவல் நிலையத்திற்கு முன்பு கூடிய உறவினர்களை விரட்டி விட்டனர். இருந்தும் ஓமலூர் மகளிர் காவலர்கள் கண் முன்னே காதலியின் உறவினர்கள் காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றனர். இதனால் ஓமலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்­வ­தேச மக­ளிர்­ தினம்..!!
Next post முன்னாள் வேட்பாளர் உட்பட இருவர் கொலை…!!