கார்-பஸ் மோதலில் தர்மசாலா யாத்திரைக்கு சென்ற 4 பேர் பலி…!!
கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை ஓம்னி காருடன் லாரி மோதிய விபத்தில் தர்மசாலாவுக்கு யாத்திரைக்கு சென்ற ஐந்து பேர் பலியாகினர்.
தட்சின கன்னடா மாவட்டத்தின் ஹலியால் பகுதியை சேர்ந்த யாத்திரை குழுவினர் சென்ற மாருதி ஓம்னி கார் இன்று அதிகாலை உத்தர் கன்னடா மாவட்டத்தில் உள்ள குல்லாப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்திசையில் மங்களூடில் இருந்து வந்துகொண்டிருந்த பஸ் காரின்மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மூன்றுபேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்மீது மோதிய பின்னரும் வேகம் குறையாத அந்த பஸ், எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
Average Rating