ஓடும் பஸ்சில் விடைத்தாள் திருத்திய பெண் விரிவுரையாளர்: பயணிகள் ஆச்சரியம்..!!
பஸ்சில் பயணம் செய்யும் போது பி.யு.சி. முதலாம் ஆண்டுக்கான விடைத்தாளை பெண் விரிவுரையாளர் ஒருவர் திருத்திய ருசிகர சம்பவம் சக பயணிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பஸ்சில் பயணம் செய்யும்போது புத்தகம் படிப்பது, பூக்கட்டுவது, செல்போன்களில் பாடல் கேட்பது, சினிமா பார்ப்பதையும் பார்த்திருப்போம், மேலும், சிலர் வெளியில் வேடிக்கைப்பார்த்து செல்வதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்திலிருந்து கே.ஆர். புரம் வரை செல்லும் அரசு பஸ்சில் நேற்று பெண் விரிவுரையாளர் பயணம் செய்தார். அப்போது பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் விரிவுரையாளர் பி.யு.சி. முதலாம் ஆண்டுக்கான கன்னட பாட விடைத்தாளை திருத்திக்கொண்டிருந்தார்.
இதை பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், விடைத்தாள் திருத்தம் செய்வதை சிலர் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப் மூலம் பரவச்செய்தனர். மேலும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தனர். விடைத்தாள்களை பஸ்சில் திருத்தம் செய்தது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, நேரமின்மை காரணமாக பஸ்சில் பயணம் செய்தபோது திருத்துவது தவறில்லை. இருந்தாலும், பொதுமக்கள் முன்னிலை விடைத்தாள் திருத்துவது குறித்து பெண் விரிவுரையாளரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் பதில் அளித்தனர்.
Average Rating