அம்புலன்ஸ் வண்டியை செலுத்த முயற்சித்த பல்கலைக்கழக மாணவன் கைது..!!
Read Time:1 Minute, 5 Second
பந்தயம் ஒன்றின் அடிப்படையில் அம்புலன்ஸ் வண்டியை செலுத்திய சட்டதுறை மாணவன் குருந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்வமானது இன்று காலை கொழும்பு ஆனந்தா-நாலந்தா கிரிக்கெட் தொடரின் நன்கொடை சேகரிப்பு குழு செயற்பாட்டின் போது இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்புலன்ஸ் சாரதி வாகனத்தில் இல்லாத நிலையில் குறித்த சட்டதுறை மாணவன் வாகனத்தை செலுத்தியுள்ளான்.
குறித்த மாணவனை விசாரணை செய்தபோது பந்தயம் ஒன்றிற்காகவே இவ்வாறு வாகனத்தை செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குருந்துவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating