மெக்சிகோ: டயர் பஞ்சராகி தறிகெட்டு ஓடிய பஸ் விபத்துக்குள்ளாகி 7 பேர் பலி..!!
Read Time:59 Second
அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு இடையில் அமைந்துள்ள தன்னாட்சி உரிமைபெற்ற நாடான மெக்சிகோவில் டயர் பஞ்சராகி தறிகெட்டு ஓடிய பஸ் சாலையை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு மெக்சிகோவில் உள்ள ஓக்சாக்கா மாநிலத்தில் இருந்து அமெரிக்க எல்லையோரம் உள்ள டிஜுவானா பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த அந்த பஸ், நயாரிட் மாநிலம் அருகே இந்த கோரவிபத்தில் சிக்கியதாகவும், இதில் காயமடைந்த 21 பயணிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating