கற்பழிப்பில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கற்பழிப்பில் இருந்து தப்பிக்க முயன்று 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஹவுராவில் நேற்று தனது ஆண் நண்பரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். இரண்டாவது மாடியில் வசிக்கும் அந்த நபரின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவரது நண்பர்களும் உடன் இருந்துள்ளனர். விருந்தினராக வந்த அந்தப் பெண்ணை மது அருந்தும்படி அவர்கள் வற்புறுத்தினர்.
பின்னர், பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். இதற்கு மறுத்த அந்தப் பெண்ணை அவர்கள் கடுமையாக தாக்கினர். அவர்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பால்கனி பகுதிக்கு அந்த பெண் ஓடிவந்துள்ளார், பின்னர் அங்கிருந்து வெளியேற வேறு வழியில்லாமல் போனதால் கீழே குதித்துவிட்டார், என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே குதித்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதுடன் அந்த வீட்டில் இருந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating