4 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த நபர் கைது..!!
Read Time:1 Minute, 6 Second
4 வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த நபரொருவர், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இந்த கொலையை செய்த குறித்த நபர், மஹாராஸ்டிரா மாநிலத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீது பல பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தனது வீட்டில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியதன் பின்னர் கொலை செய்து சடலத்தை மரப்பெட்டியில் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
Average Rating