பின்லாந்து நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண் கற்பழிப்பு

Read Time:1 Minute, 15 Second

பின்லாந்து நாட்டை சேர்ந்த 36 வயது பெண் நவி மும்பை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்டார். பின்லாந்தில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அந்த பெண் அலுவலக வேலையாக இந்தியாவுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் காலை அந்த பெண் உடல் காயங்களுடன் பெட்ரோல் பங்க் அருகே மயங்கி கிடந்ததை போலீசார் பார்த்தனர். அவரை மருத்துவமனையில் அனுமதிக்க போலீசார் முயற்சி மேற்கொண்ட போது மறுத்து விட்ட அந்த பெண்மணி தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு ஓட்டலுக்கு சென்று உணவருந்தி விட்டு திரும்பியபோது சிலர் அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு
Next post சிரஞ்சீவியை விமர்சிக்கும் ரோஜா