செல்போன் மூலம் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை: சிவகங்கை மாவட்ட போலீஸ்காரர் மீது வழக்கு…!!

Read Time:1 Minute, 39 Second

fdf669e7-2a95-40bb-8f3b-5f7d1d086ce9_S_secvpfமதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கச்சைகட்டியை சேர்ந்தவர் சந்தனம், இவரது மனைவி லலிதா (வயது35).

இவர் பாலமேடு காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டில் இருந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் அமீர்ஜான் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆறு மாதத்திற்கு முன்பாக அமீர்ஜானுக்கு திருமணம் முடிந்தது.

இதன்பின்னர் இவருடன் பழகுவதை லலிதா தவிர்த்து வந்தார். ஆனால் அமீர்ஜான் தொடர்ந்து தொலைபேசியில் தொந்தரவு செய்தார். இதற்கு அவர் உடன்படாததால் அமீர்ஜான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வந்தார்.

இதனிடையே இவரது டார்ச்சர் தாங்காமல் பாலமேடு போலீசில் லலிதா புகார் செய்தார். இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அமீர்ஜான் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: 5 பேர் கைது…!!
Next post ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: கொலையாளியை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்…!!