ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து, தடியால் அடித்து பெண்ணைக் கொன்றவர் கைது…!!
மூடநம்பிக்கைக்கு பேர்போன ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து ஒருபெண்ணை தடியால் அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு சிங்பம் மாவட்டம், நான்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் அகல்யா(48). கணவரை பிரிந்த இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்குள்ள தனது நாத்தனாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதேகிராமத்தைச் சேர்ந்த ஜோதா சிங்(52) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு தனியாக வெளியே வந்துள்ளார்.
அப்போது, இருட்டில் நிழல் போன்ற ஒரு உருவம் அவரை தொடமுயன்றதாக உணர்ந்த அவர், அருகாமையில் இருந்த தடிக்கம்பை எடுத்து அந்த உருவத்தை தாறுமாறாக தாக்கினார். வலியால் துடிதுடித்து அலறிய அகல்யா, மண்டை பிளந்து மூளை தரையில் சிதறிவிழும் அளவுக்கு தாக்கிய ஜோதா சிங், சித்தபிரமை பிடித்தவராக பிணத்தின் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்த அக்கம்பக்கத்து வீட்டினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்துவந்த போலீசார், கொலை குற்றச்சாட்டின்கீழ் ஜோதா சிங்கை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
Average Rating