தொழில் நஷ்டத்தால் விரக்தி: மனைவி–2 குழந்தைகளுடன் விஷம் குடித்த வியாபாரி…!!
அம்பத்தூர் அடுத்த சபரி அய்யப்பன் நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு முத்துவேல் (12) என்ற மகனும், நித்யலட்சுமி (9) என்ற மகளும் உள்ளனர்.
செந்தில்வேல், பேரிச்சம் பழம் மொத்த விற்பனை வியாபாரம் செய்து வந்தார். தொழிலுக்காக பலரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் செந்தில்வேல் கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்தார். இதுபற்றி மனைவி லட்சுமியிடம் புலம்பி வந்தார்.
இந்த நிலையில் தொழில் நஷ்ட விரக்தியால் செந்தில்வேல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி மனைவி, மகன், மகளுடன் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் அலறி துடித்தன.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் செந்தில் வேல் வீட்டு கதவை உடைந்து 4 பேரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Average Rating