இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து சிறுமி பலி..!!
Read Time:1 Minute, 12 Second
மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்
நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டிடத்தில் சிறுமி மேலும் பலருடன் நின்று கொண்டிருந்த வேளையிலையே விழுந்துள்ளார்.
காயமடைந்த சிறுமி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவரது பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating