வெளியூரில் இருந்து பெற்றோருடன் திருமண விழாவுக்கு வந்த 7 வயது சிறுமி கற்பழித்துக் கொலை…!!
Read Time:1 Minute, 13 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக வெளியூரில் இருந்து பெற்றோருடன் வந்த 7 வயது சிறுமி கற்பழித்துக் கொலப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள மைன்புரி மாவட்டம், ஐலாவ் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு வந்திருந்த சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று காணாமல் போனார். அவரை உறவினர்கள் தேடிவந்தனர். நேற்றுகாலை அலங்கோலமான நிலையில் ஒரு சிறுமியின் பிணம் கிடப்பதாக தகவல் அறிந்த பெற்றோர், தங்களது மகள் கற்பழிக்கப்பட்டு, பிணமாக கிடப்பதை அறிந்து வேதனையால் கதறி அழுதனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
Average Rating