பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!
பூதலூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மனைவி அகிலாம்பாள் (71) இவர் தனது பேரன் இளவரசனுடன்(29) திருக்காட்டுப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு செல்லப்பன் பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கிப்பட்டி சாலையில் செல்லப்பன்பேட்டை பிரிவு சாலையில் திரும்பியபோது திடீர் என நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.
இதில் அகிலாம்துபாளுக்கும் இளவரசனுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு இரண்டு பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி அகிலாம்பாள் இறந்தார்.
இது குறித்து அகிலாம்பாளின் மகள் பவுனம்மாள் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) சப்–இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Average Rating