தனியார் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை…!!
Read Time:1 Minute, 5 Second
ஆந்திராவில் மிக பிரபலமான ‘ஜெமினி மியூசிக்’ டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றிவந்த நிரோஷா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஐதராபாத் அருகிலுள்ள செகந்திராபாத் நகரின் சிந்தி காலனி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நிரோஷா, இன்று காலை தனது அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நிரோஷாவின் மரணத்தில் உள்ள பின்னணி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating