பெண் அரசியல்வாதி இனந்தெரியாத கும்பலால் கடத்தல்..!!
வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் பலவந்தமாகப் புகுந்த மூவர் அந்த ஹோட்டல் உரிமையாளரும் முன்னாள் வெலிகம நகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினருமான யமுனா காந்தி புஞ்சிஹேவா எனும் 40 வயதுப் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளதாக வெலிகம தலைமையகப் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்குள் நுழைந்தபோது அங்கு இரு ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும் இந்தக் கும்பல் அவர்களைக் கத்திமுனையில் பயமுறுத்திய பின் அவர்களின் கை, கால்களைத் துணிப்பட்டிகளால் கட்டி அறையொன்றில் போட்டு மூடிய பின்னர் இந்தப் பெண்ணைக் கடத்தி தாங்கள் வந்த ஜீப்பில் ஏற்றிச் சென்றுள்ளார்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்தப் பெண்ணுக்கு வெலிகம நகரில் இரண்டு சுற்றுலா ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளதாகவும், இரு பிள்ளைகளின் தாயான அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நகரசபை உறுப்பினராக இருந்தவர் எனவும் தெரியவருகின்றது.
அவரது ஹோட்டலில் முன்பு பணிபுரிந்த முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் இந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் இக்கடத்தல் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் வெலிகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating