சாமியாரின் லீலைகள்

Read Time:3 Minute, 23 Second

சென்னையில் பெண் டாக்டரை 3 வது திருமணம் செய்த சாமியார் பற்றி அவரது முதல் மனைவி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆபாசப் படம் எடுத்து பெண்களை மிரட்டியதாகவும், மது கொடுத்து கன்னிப் பெண்களின் கற்பை சூறையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேளச்சேரி விஜயநகர் பகுதியில் துர்கை ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் பழனிச்சாமி (வயது 48). இவருக்கு சந்திரா (வயது 50) மணிமேகலை (வயது 35) என்ற இரண்டு மனைவிகளும், மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாநகர் கிழக்கு கலைவாணி நகரில் வசிக்கும் போஜராஜ் என்பரின் மகள் திவ்யாவை சாமியார் பழனிச்சாமி 3வது திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். சாமியார் பழனிச்சாமியின் முதல் மனைவி சந்திரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டீக்கடை நடத்தி வந்த எனது கணவர் திடீரென குறி சொல்லும் தொழிலில் இறங்கினார். இதில் அவருக்கு ஏராளமான பணம் கொட்டத் தொடங்கியது. அப்போது அவருக்கு பணத்தாசையோடு, பெண்ணாசையும் சேர்ந்து கொண்டது. அவர் நடத்திவந்த துர்கை ஆசிரமத்திற்கு ஏராளமான இளம் பெண்கள் வந்தனர். அவர்களுக்கு தீர்த்தம் என்ற பெயரில் மது கொடுத்து அவர்களின் கற்பை சூறையாடினார். மேலும் அவர்களைக் மயக்க நிலையில் ஆபாசப்படம் எடுத்து பலமுறை அவர்களை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்தார்.

இதனை தட்டிக்கேட்ட என்னை தாக்கினார். மேலும் பெண்களை நரபலி கொடுக்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார். அவர் விரித்த வலையில் வந்து விழுந்தவர்தான் தற்போது 3வது திருமணம் செய்துகொண்ட டாக்டர் திவ்யா.

இளம்பெண்களின் வாழ்வை கெடுத்த எனது கணவர் பழனிச்சாமி தண்டிக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதேபோன்று டாக்டர் திவ்யாவின் பெற்றோரும் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் பழனிச்சாமியால் தனது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பழனிச்சாமியிடமிருந்து தனது மகளை மீட்டுத்தரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த புகார்கள் குறித்து அண்ணாநகர் துணைக் கமிஷனர் ஜெயகௌரி உத்தரவின் பெயரில் ஜே.ஜே.நகர் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றோ அல்லது நாளையோ சாமியார் பழனிச்சாமி கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்திய சிறைகளில் தூக்கு தண்டனைக்காக 1,150 பேர் காத்திருப்பு
Next post இந்தியாவில் ஆண்டுதோறும் கருக்கலைப்பு செய்வதால் 80,000 பெண்கள் இறப்பு