ஆஸ்பத்திரியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி…!!
Read Time:1 Minute, 27 Second
ஆந்திர மாநிலம், விஜயநகரம் பகுதியில் உள்ள மகாராஜா மருத்துவ அறிவியல் அரசு ஆஸ்பத்திரியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறிவிழுந்த விழுந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.
நெல்லிமார்லா என்ற இடத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியின் மூன்றாவது மாடியிலுள்ள வார்டில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த சூரியநாராயணா(70) என்ற அந்த முதியவர் இன்றும் வழக்கம்போல் காலைக்கடன்களை கழிப்பதற்காக பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.
அப்போது, திறந்துகிடந்த ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்த அவர் அங்கிருந்து கீழே விழுந்தார். அந்த கட்டிடத்தின் முதல் மாடிப்பகுதியில் உள்ள சாளரத்தின்மீது தலை மோதியதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து தரையில் விழுந்த சூரியநாராயணா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Average Rating