கொடுங்கையூரில் கள்ளக்காதலனை குத்திய இளம்பெண் தற்கொலை போலீசுக்கு பயந்து தற்கொலை…!!

Read Time:2 Minute, 30 Second

f3df57cd-6760-492a-8b54-25e5de4b9fa9_S_secvpfகொடுங்கையூர் சிட்கோ நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முருகேசன். லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அருணா (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அருணாவுக்கும் கொடுங்கையூர் காந்திநகரை சேர்ந்த ரமேசுக்கும் கள்ளக்காதல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முருகேசன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அருணாவும் 2 மகன்களும் இருந்தனர். நள்ளிரவு 11 மணி அளவில் ரமேஷ், அருணாவை பார்க்க வீட்டுக்கு வந்தார். இருவரும் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அருணா கத்தியால் ரமேசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கினார். இதனை பார்த்து பயந்து போன அருணா போலீசார் தன்னை கைது விடுவார்கள் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் படுக்கை அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு எழுந்த அருணாவின் மகன்கள் தாய் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது அருணா தற்கொலை செய்து இருப்பதும் அவளுடைய கள்ளக்காதலன் ரமேஷ் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், முத்துராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரமேசை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹோலி பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் போலி மது குடித்த 35 இந்துக்கள் பலி…!!
Next post கொருக்குப்பேட்டையில் தலைமுடி வெட்டாததை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை…!!