செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: மாணவன் உள்பட 3 பேர் கைது…!!

Read Time:2 Minute, 1 Second

71e82e3c-8a9f-4876-98f7-019b5f7f2f5d_S_secvpfபடப்பை அருகே உள்ள காவனூரை சேர்ந்த 15 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர்.

இதில் கோபம் அடைந்த மாணவி சிங்கப்பெருமாள் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து காவனீரை சேர்ந்த நண்பர் விமலுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

உடனே விமல் தனது நண்பர்கள் அழகேசன், காவனூரை சேர்ந்த பிளஸ்–1 மாணவர் ஆகியோரும் அங்கு வந்தார்.

அவர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் திருக்கச்சூரில் உள்ள மோட்டார் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு விமல் மாணவியை கற்பழித்தார். பின்னர் மாணவன் அழகேசன் கற்பழிக்க முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் விமல், அழகேசன் மற்றும் மாணவரை மடக்கி பிடித்தனர். பின்னர் மாணவியை மீட்டு மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விமல், அழகேசன், பிளஸ்–1 மாணவரை கைது செய்தனர். நண்பருடன் சென்ற மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொருக்குப்பேட்டையில் தலைமுடி வெட்டாததை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை…!!
Next post காரியாபட்டி அருகே பஸ் தீப்பிடித்து எரிந்தது: 60 பயணிகள் உயிர் தப்பினர்…!!