காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி…!!
Read Time:58 Second
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கோனி நல்லா என்ற இடம் அருகே சாலைகளில் சரிந்து கிடந்த பனிச்சரிவை அகற்றும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏராளமான பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் பனிப்பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து பனிப்பாறைகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
Average Rating