தைவானில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு சிறுமி தலை துண்டித்து படுகொலை..!!

Read Time:1 Minute, 23 Second

ebd951de-28ec-49b2-b2c6-89aa2eed84b4_S_secvpfதைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 3 வயது சிறுமி லியூ. நேற்று முன்தினம் இவள் தனது தாயாருடன் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையம் சென்றாள்.

அங்கு உறவினர்களை சந்திக்க ரெயில் நிலையத்தின் வெளியே நின்று கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமி லியூவை கத்தி முனையில் மடக்கினான்.

அதை பார்த்த தாய் அவனிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற முயன்றார். குழந்தையை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் லியூவின் கழுத்தை கத்தியால் துண்டித்து கொலை செய்தான்.

அதன் பின்னர் தப்பி ஓடிய அவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாணையில் அவனது பெயர் லாங் என தெரிய வந்தது. கொலை செய்ய பயன்படுத்திய சமையலறை கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

கொலைக்கான காரணம் தெரியவில்லை. தைவானில் இது போன்ற கொடூர கொலைகள் நடப்பது மிகவும் அரிதாக கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சைப்ரஸ் தீவில் குடியேறவும் முன்னாள் மனைவியை சந்திக்கவும் அனுமதி வேண்டும்: எகிப்து விமானத்தை கடத்தியவன் கோரிக்கை…!!
Next post ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டது…!!