இலங்கையில் மூளை வளர்ச்சி குன்றிய 37,500 குழந்தைகள்..!!
Read Time:1 Minute, 23 Second
இலங்கையில் வருடாந்தம் 37,500 குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் பதிவாகின்றன என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மனநோயாளர் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஐந்து வயதுக்கும் குறைந்த 185,000 குழந்தைகள் ஏதேனும் ஓர் வகையில் மூளை வளர்ச்சியின்றி வாழ்ந்து வருவதாகவும்.
இந்தநிலையில் இலங்கையில் தகுதி பெற்ற சிறுவர் உளவியல் மருத்துவ நிபுணர்கள் நான்கு பேர் மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மருத்துவ நிபுணர்களின் தட்டுப்பாட்டுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என டொக்டர் டி சில்வாவலியுறுத்துயுள்ளார்.
Average Rating