மேட்டூர் அருகே தாய்–தந்தை, சகோதரியை வெட்டி கொன்ற விவசாயி…!!

Read Time:7 Minute, 18 Second

201604031319256621_mettur-near-3-people-murder-case_SECVPFமேட்டூர் அருகே தாய்–தந்தை, சகோதரியை வெட்டி கொன்ற விவசாயி. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

மேட்டூர் அருகே உள்ள வீரனூர் காட்டு வளவு, மரிக்குன்று பகுதியை சேர்ந்தவர் மன்னாதன் விவசாயி. இவரது மனைவி மைலி, மகள் பாப்பாத்தி. கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தாய்–தந்தையுடன் வசித்துவந்தார்.

மன்னாதன் மகன் செல்வம் தந்தையின் வீட்டின் அருகே மனைவியுடன் வசித்து வருகிறார். விவசாய வேலைகளை கவனித்து வந்தார்.

சொத்தை பிரிப்பதில் தந்தை மன்னாதனும் மகன் செல்வத்துக்கும் தகராறு ஏற்பட்டது.

நேற்றிரவு மன்னாதன், அவரது மனைவி மைலி, மகள் பாப்பாத்தி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அந்த சமயத்தில் செல்வத்தின் வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டை பூட்டி விட்டு செல்வம் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

சொத்து தகராறில் தாய், தந்தை, சகோதரி ஆகிய 3 பேரையும் கொலை செய்து விட்டு, குடும்பத்துடன் செல்வம் தப்பி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையில் 3 பேர் கொலை செய்யப்பட்டது ஏன் என்று பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

மன்னாதனுக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் தான் மன்னாதன் குடிசை வீடு கட்டி, அதில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

2–வது மகன் மாதையன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து மன்னாதன் அனைவருக்கும் 3 ஏக்கர் சொத்தை பிரித்து கொடுத்தார்.

இந்த சொத்தை பிரித்து கொடுத்துள்ளதால், தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் கொடுத்து விட்டு, கிரையம் செய்து கொள்ளும்படி மன்னாதன் கூறியுள்ளார்.

அதற்கு மூத்த மகன் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். என்னிடம் ரூ.50 ஆயிரம் இல்லை. எனவே, அந்த பணத்தை தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மன்னாதன் கேட்டுக் கொண்டப்படி அவருடைய மகன்கள் மாதையன், மயில்சாமி ஆகியோர் குடும்பத்தினர் தலா ரூ. 50 ஆயிரத்தை வாழ்வாதார செலவிற்காக கொடுத்தனர். ஆனால், செல்வம் மட்டும் பணம் கொடுக்கவில்லை.

அவரிடம் சென்று மன்னாதன் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் பணத்தை தரமுடியாது. கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இது தொடர்பாக தந்தை மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்த சண்டையதடுத்து விட்டு சமாதானம் பேசியுள்ளனர்.

இது குடும்ப பிரச்சினை ஊரில் உள்ளவர்கள் யாரும் இதில் தலையிட வேண்டாம் என செல்வம் கூறியுள்ளார். இதனால் அவர்களுடைய சண்டையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தடுப்பதில்லை.

தந்தை அடிக்கடி பணம் கேட்டதால் செல்வத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாய், தந்தை மற்றும் அக்காள் ஆகிய 3 பேரையும் கொலை செய்து விட்டால் அவர்களுடைய சொத்து பாகமும் தனக்கு கிடைத்து விடும் என நினைத்தார்.

நேற்று இரவு மன்னாதன், மனைவி மைலி, மகள் பாப்பாத்தி ஆகிய 3 பேரும் உணவு சாப்பிட்டு விட்டு, குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். மன்னாதன் ஒரு கயிற்று கட்டிலிலும், மனைவி மைலி ஒரு கட்டிலிலும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். மகள் பாப்பாத்தி தரையில் பாய் விரித்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அனைவரும் அந்த குடிசை வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் செல்வம் அங்கு வந்தார். அப்போது அவர் தந்தை, தாய் என்று பார்க்காமல் ஈவு, இரக்கமின்றி ஆயுதத்தால் வெட்டினார். அவர்களுடைய அலறல் சத்தத்தை கேட்டதும், தரையில் படுத்திருந்த அக்காள் பாப்பாத்தி எழுந்து விட்டார்.

தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையும் கொடூரமான முறையில் செல்வம் தாக்குவதை கண்டதும் பாப்பாத்தி அதிர்ச்சி அடைந்து, கூச்சலிட்டப்படி தடுக்க முயன்றார்.

தடுக்க முயன்ற அக்காளையும் வெட்டினார். அவர் உயிர் பயத்தில் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். எனினும் அவரையும் விடாமல் துரத்திச் சென்று செல்வம் வெட்டிக்கொலை செய்தார். இதையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

ஒருவரால் 3 பேரையும் கொலை செய்வது கடினம். எனவே, அவர் மட்டும் தான் இந்த கொலைகளை செய்திருக்க வாய்ப்பில்லை. வேறும் சிலரும் சேர்ந்து தான் இந்த கொலைகளை செய்திருக்க கூடும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் சுற்று வட்டார பகுதி மக்கள் அங்கு திரளாக கூடினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய அதிபராக மஹமடோ ஐசோபோ பதவி ஏற்றார் – நைஜீரியா நாட்டு மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா…!!
Next post நான்கு வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி..!!