பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்த்து பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்ற குண்டு செயலிழப்புப் பிரிவினர்..!!
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அப்பெண்ணின் வீட்டுக்கு குண்டு செயலிழப்புப் பிரிவினர் விரைந்து சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தான் 4 வருடங்களாக வீட்டில் வைத்திருக்கும் குண்டு ஒன்றின் கவசத்தை இப்புகைப்படத்தின் மூலம் மேற்படி பெண் வெளியிட்டமையே இதற்குக் காரணம்.
57 வயதான ஜேன் மெப் எனும் இப்பெண்ணும் அவரின் கணவர் அன்ட்ரூ மெப் மற்றும் இத்தம்பதியின் மகனான கிறேக் ஆகியோர் தமது முந்தைய வீட்டு வளாகத்திலிருந்து இந்த குண்டின் பகுதியை கண்டெடுத்தனராம்.
ஷ்ரோப்ஷயர் பிராந்தியத்தில் வசித்தவேளையில், வீட்டுத் தோட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இது கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் வடக்கு வேல்ஸ் பகுதிக்கு குடிபெயர்ந்த போதிலும் அந்த குண்டின் கவசத்தை தம்முடன் எடுத்துச் சென்று ஓர் அலங்காரப் பொருள் போன்று வீட்டில் வைத்திருந்தனர்.
இதன் புகைப்படத்தை ஜேன் மெப் கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இப்புகைப்படம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது குண்டு செயலிழக்கும் பிரிவினர் அப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
அவ்வீடு அமைந்திருந்த வீதியும் மூடப்பட்டது. மேற்படி குண்டு முதலாம் உலக யுத்த காலத்துக்குரியவை என அதிகாரியொருவர் தெரிவித்ததாக ஜேன் மெப் கூறினார்.
எனினும், அந்த குண்டுக் கவசமானது ஆபத்தற்ற பொருள் என பிரகடனப் படுத்தப்ப ட்டதையடுத்து, அதை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு இக்குடும்பத்தினருக்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
Average Rating