மருமகள் மர்ம மரணம்: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., மனைவி, மகன் கைது..!!
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர் நரேந்திர காஷ்யப். இவரது மகன் சாகரின் மனைவியான மான்ஷி காஷ்யப் (வயது 29) நேற்று முன்தினம் தனது தலையில் குண்டு காயங்களுடன் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இந்த மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மான்ஷியின் தந்தையும், மாநில முன்னாள் மந்திரியுமான ராலால் காஷ்யப், தனது மகளிடம் நரேந்திர காஷ்யப் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறினார். இதற்காக அவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நரேந்திய காஷ்யப், அவரது மனைவி, சாகர் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். வரதட்சணை கேட்டு மான்ஷியை கொடுமைப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், மான்ஷியின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating