மட்டக்களப்பில் பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 24 Second
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு காட்டுப் பாலத்தின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
பாலத்திற்குக் கீழ் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று வியாழக் கிழமை மாலை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், நீரில் அமிழ்ந்த நிலையில், சடலத்துடன் துவிச்சக்கரவண்டி ஒன்றும் காணப்படுவதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை குறித்த சடலம் மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் எனவும், குறித்த நபர் ஓர் நோயாளி எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating