நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்த வாலிபர் தீயில் கருகி பலி…!!

Read Time:1 Minute, 37 Second

thi-3-310x165ஐதராபாத் பாத்தபஸ்தி பகுதியில் உள்ள சாலலாவை சேர்ந்தவர் முகமது ஜலாலுதீன் (வயது 19). இவர் சிறுவயதில் இருந்தே பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் “இந்தியா வின் காட்டேலன்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச் சிக்காக ஜலாலுதீன் தீ மூலம் பல்வேறு சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டார்.

அவரது சாகச நிகழ்ச்சியை நண்பர்கள் செல்போனில் படம் எடுத்து தொலைக்காட்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர் முதலில் ஜலாலுதீன் வாயில் மண்எண்ணை ஊற்றி அதை ஊதி நெருப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் டிசர்ட்டில் மண்எண்ணை ஊற்றி எரியவிட்டு டிசர்ட்டை கழற்றி வீசும் சாகச நிகழ்ச்சி நடத்த முயன்றார். இதற்காக டிசர்ட்டில் மண்எண்ணை ஊற்றி தீவைத்தார்.

இதனை நண் பர்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் டிசர்ட் இறுக்க மாக இருந்ததால் ஜலாலுதீனால் அதனை வேகமாக கழற்ற முடியவில்லை அதற்குள் தீ மளமள என உடல் முழு வதும் பரவியது.

அலறிதுடித்த அவரை நண்பர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைப்பெரியாறு அருகே நிலநடுக்கம்…!!
Next post தந்தையின் தற்கொலையை தடுத்த 10 வயது சிறுமி…!!