வீடு புகுந்து திருடியவருக்கு கிடைத்த தண்டனை…!!
Read Time:1 Minute, 17 Second
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குல்வா என்ற இடத்தில் வீடு புகுந்து பூண்டு திருடியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குல்வா என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய் பரிஜாலி (வயது 33).
இவர் அந்த ஊரில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பூண்டுகளை திருடினார். இதை ரமேஷ் பார்த்து விட்டார். அவரும் மற்றும் சிலரும் சேர்ந்து சஞ்சய் பரிஜாலியை மடக்கி பிடித்தனர்.
அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பலத்த காயத்துடன் இருந்த அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது தொடர்பாக ரமேஷை பொலிசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Average Rating