லெபனான் போர் -அல்கொய்தா எச்சரிக்கை
Read Time:54 Second
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரேபிய டெலிவிஷன் அல்-ஜசீரா மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. “காசா பகுதியிலும், லெபனானிலும் எங்கள் சகோதரர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் மட்டும் நடத்துகிறது என்று கூறமுடியாது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய அணி நாடுகள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன” என்று அல்-கொய்தா இயக்கம் கூறியுள்ளது.