கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி..!!
Read Time:1 Minute, 7 Second
எஹெலியகொடை-புழுகஹபிட்டிய பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து நேற்று ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை இரண்டரை வயதுடையது எனவும் மேலும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை விளக்கமறியலில் உள்ளதாகவும் ,தாயார் விற்பனை முகவராக பணிபுரிவதால் குழந்தை பாட்டியுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டியுடன் இருந்த குழந்தை காணாமல் போனதை அடுத்து தேடும் போதே குறித்த கிணற்றில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating