இந்தியாவில் கடும் வெப்பம் – 150 பேர் வரை பலி..!!
Read Time:1 Minute, 16 Second
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, இதுவரை 150 பேர் வரையில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாத்திரம், 120க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
டில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சராசரியாக 40 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலையானது எதிர்வரும் தினங்களில் 44 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களும் இதனால் கமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருநெல்வேலி, மாவட்டங்களில் கடும் வெயிலுடனான காலநிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Average Rating